புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் அச்சமின்றி அடையாளபடுத்துங்கள் - கொரோனா பரவாமல் தடுக்க ஒத்துழையுங்கள் - யாழ் அரச அதிபர் கோரிக்கை - Yarl Voice புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் அச்சமின்றி அடையாளபடுத்துங்கள் - கொரோனா பரவாமல் தடுக்க ஒத்துழையுங்கள் - யாழ் அரச அதிபர் கோரிக்கை - Yarl Voice

புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் அச்சமின்றி அடையாளபடுத்துங்கள் - கொரோனா பரவாமல் தடுக்க ஒத்துழையுங்கள் - யாழ் அரச அதிபர் கோரிக்கை




யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கொண்டுள்ள மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கொரோனா அடையாளம் காணப்பட்டபுங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் அச்சமின்றி தமது விபரங்களை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பில் அரச அதிபர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...

யாழ்மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர் கடந்த 3ம் திகதி இரவு கொழும்பிலிருந்து 4ம் திகதி அதிகாலை புங்குடுதீவை சென்றடையும் வரை பயணித்த பேருந்துகளின் இலக்கங்களும் குறிப்பிட்ட தரிப்பு நிலையத்தில் இருந்து அவை புறப்பட்ட நேரமும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஏற்கனவே அறியத்தரப்பட்டுள்ளது. 

எனவே குறிப்பிட்ட பேருந்துகளில் 3ம், 4ம் திகதிகளில்;;; இவருடன் பயணித்தவர்கள் தமது விபரங்களை வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறியத்தரவும். 

பயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்;களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்நோய் எமது மாவட்டத்தில்; பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமிள்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post