புங்குடுதீவு பெண் பயணித்த பருத்திதுறை பேருந்து சாரதி நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டனர் - Yarl Voice புங்குடுதீவு பெண் பயணித்த பருத்திதுறை பேருந்து சாரதி நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டனர் - Yarl Voice

புங்குடுதீவு பெண் பயணித்த பருத்திதுறை பேருந்து சாரதி நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டனர்



புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்து தொடர்பில் புதிய தகவல்...

புங்குடுதீவு பெண் கொழும்பு- பருத்தித்துறை பஸ்ஸில் பயணித்துள்ளார். 

புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் 
 04/10/2020 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் அவர் பயணித்த பஸ் வண்டி  12.30am புத்தளம் பகுதியில் பஸ் பழுதடைந்ததால் கொழும்பு பருத்தித்துறை CTB பஸ்ஸில் இலக்கம்  ND 9776 இலக்க பஸ் மூலம் பயணித்து கொடிகாமத்தில் காலை 4.30 இறங்கி பின் யாழ்ப்பாணம் பஸ்ஸில் பயணித்துள்ளார்.

இந்நிலையில்   கொழும்பு பருத்தித்துறை பஸ்ஸில் பணியாற்றிய நடத்துனர், ஓட்டுனர் இனங்காணப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இந்த பஸ்சில் பயணித்தோர் உடன் தன்னார்வமாக உங்களை வெளிப்படுத்தி பாதுகாப்பைப் பெறுங்கள்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன்

0/Post a Comment/Comments

Previous Post Next Post