கிளிநொச்சியில் ஒருவர் உட்பட 4 பேருக்கு கொரோனா - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice கிளிநொச்சியில் ஒருவர் உட்பட 4 பேருக்கு கொரோனா - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice

கிளிநொச்சியில் ஒருவர் உட்பட 4 பேருக்கு கொரோனா - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு




யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 322  பேருக்கு Covid-19 பரிசோதனை இன்று செய்யப்பட்டது. நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

 கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

முல்லைத்தீவு  தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 2 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு   Covid-19 தொற்று  இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. .

0/Post a Comment/Comments

Previous Post Next Post