அச்சமின்றி சமூக பொறுப்புடன் விபரங்களை வெளிப்படுத்துங்கள் - மாகாண சுகாதார பணிப்பாளர் கோரிக்கை - Yarl Voice அச்சமின்றி சமூக பொறுப்புடன் விபரங்களை வெளிப்படுத்துங்கள் - மாகாண சுகாதார பணிப்பாளர் கோரிக்கை - Yarl Voice

அச்சமின்றி சமூக பொறுப்புடன் விபரங்களை வெளிப்படுத்துங்கள் - மாகாண சுகாதார பணிப்பாளர் கோரிக்கை




கொழும்பில் இருந்து ஐப்பசி 25ம் திகதி கண்டாவளை ,கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த ஒருவருக்கு 
கொரோனா தொற்று கார்த்திகை 02 ம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்; 25ம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து 
சபைக்கு சொந்தமான Nடீ 9756 இலக்க பேருந்தில் பயணம் செய்து அன்று மாலை 4.00 மணிக்கு
வவுனியா வந்தடைந்துள்ளார். 

பின்னர்;; அதே தினம் மாலை 4.00 மணிக்கு வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம்; 
நோக்கி புறப்பட்ட Nடீ 9899 இலக்க தனியார் பேருந்தில் பயணித்து கிளிநொச்சி பேருந்து 
நிலையத்தை மாலை 6.00 மணிக்கு வந்தடைந்துள்ளார்.

இதன் பின்னர் கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி அதேதினம் 
மாலை 6.15 மணிக்கு புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான துஐ 0758 இலக்க பேருந்தில் பயணம் 
செய்து கண்டாவளையை அடைந்துள்ளார்.

மேற்படி பஸ்வண்டிகளில் இவர்களுடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர 
அவசர அழைப்பிற்குரிய 021 222 6666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை 
அறியத்தரவும்.

பயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்;களுக்கு கொரோனா தொற்று உள்ளதா 
எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்நோய் எமது மாவட்டத்தில்; பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி சமூக பொறுப்புணர்வுடன் 
உங்களின் தகவல்களை வழங்கி; ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post