வடக்கு மாகாணத்திற்கு வருபவர்களுக்கு சுகாதாரப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice வடக்கு மாகாணத்திற்கு வருபவர்களுக்கு சுகாதாரப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

வடக்கு மாகாணத்திற்கு வருபவர்களுக்கு சுகாதாரப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல்


தற்போது நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. எனவே 07.11.2020ஆம் திகதியிலிருந்து வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இருந்து வருகை தந்தவர்கள் அனைவரும் தத்தமது பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரியிடம் தம்மை பதிவு
செய்துகொள்ள வேண்டும். 

இவர்களை வீட்டில் சுயதனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் புறப்பட்டு வந்த இருந்து வந்த பிரதேசங்களின் நோய்நிலைமைகளின் அபாயங்களைப் பொறுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் தீர்மானிப்பர்.

இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரிரூபவ் பொதுச் சுகாதார பரிசோதகர் குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தர வேண்டும்.

இதன் மூலம் தங்;களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு
வழங்கவும் இவ்வாறு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post