வடக்கிலுள்ள அரச மற்றும் அரசசார்ப்பற்ற நிறுவனங்கள் வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் - Yarl Voice வடக்கிலுள்ள அரச மற்றும் அரசசார்ப்பற்ற நிறுவனங்கள் வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் - Yarl Voice

வடக்கிலுள்ள அரச மற்றும் அரசசார்ப்பற்ற நிறுவனங்கள் வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்


வடக்கு மாகாணத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றும் அனைவரதும் பெயர் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் நிலவி வருவதால் இந்நோய் தொடர்பான கண்காணிப்பினை இலகுபடுத்தும் பொருட்டு ஆளுநர் அவர்கள் அனைத்து அரச அரச சார்பற்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களினதும் பெயர் வதிவிட முகவரி மற்றும் கைத்தொலைபேசி இலக்கம் என்பவற்றை நிறுவனம் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தல்
வழங்கியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு நிறுவனமும் தமது ஊழியர்களில் சிரேஷ;ட நிலையிலுள்ள ஒருவரை நிறுவனத்திற்கான இணைப்பாளராக நியமனம் செய்து அவரது விபரங்களையும் சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்க வேண்டும்.
இத்தொடர்பாடல் தகவல்களை அனைத்து நிறுவனங்களும் தமது சுகாதார வைத்திய அதிகாரிக்கு 13.11.2020ஆம் திகதிக்கு முன்பு ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கமைய சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post