கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று - இன்றைய பரிசோதனையில் உறுதிப்படுத்தியதாக பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று - இன்றைய பரிசோதனையில் உறுதிப்படுத்தியதாக பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று - இன்றைய பரிசோதனையில் உறுதிப்படுத்தியதாக பணிப்பாளர் அறிவிப்பு



யாழ் போதனா வைத்தியசாலையில் ஆய்வுக் கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா தனிமைப்படுத் தல் நிலையத்தில் இருந்த எட்டு பேருக்கும்  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இந்த பரிசோதனைகள் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாவது..

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 8 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில்  கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் சாவடைந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக  கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில் இருந்து  வருகை தந்திருந்த குறித்த நபரின் மகளுக்கு  தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுஉறுதி செய்யப்பட்டது.

கண்டாவளை பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலில்  இருக்கும்  ஒருவருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.)


0/Post a Comment/Comments

Previous Post Next Post