பிள்ளைகளை நினைவு கூரவும் பெற்றோருக்கு தடை விதித்த ராணுவம் - இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோர் கதறல் - Yarl Voice பிள்ளைகளை நினைவு கூரவும் பெற்றோருக்கு தடை விதித்த ராணுவம் - இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோர் கதறல் - Yarl Voice

பிள்ளைகளை நினைவு கூரவும் பெற்றோருக்கு தடை விதித்த ராணுவம் - இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோர் கதறல்




2 பிள்ளைகள், மருமகன் என மூவர் போரில் உயிர்க்கொடை வழங்கிய நிலையில் அவர்களை நினைவேந்துவதற்கு தனது வீட்டின் முன்றலில் ஏற்பாடுகளை செய்த பெற்றோருக்கு பொலிஸார் மற்றும் இராணுவம் சென்று தடைவிதித்தது.

அதனால் அவர்கள் வீட்டுக்குள் தமது பிள்ளைகள் மற்றும் மருமகனுக்கு படையல் படைத்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தச் சம்பவம் பருத்தித்துறை சுப்பர்மடத்தில் இன்று நவம்பர் 27 மாலை இடம்பெற்றது.

அவர்களுடைய வீட்டுக்கு இன்று மாலை சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் வீட்டின் முற்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களைக் கழற்றுமாறு அறிவுறுத்தினர். அவற்றை வீட்டில் இருந்தவர்களைக் கொண்டு பொலிஸார் அகற்ற வைத்தனர்.

அத்துடன், வீட்டின் முன்பாக இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வீட்டினுள் படையல் படைத்து தீபங்கள் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post