யாழில் இன்றும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - யாழ் போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice யாழில் இன்றும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - யாழ் போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice

யாழில் இன்றும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - யாழ் போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு



யாழ்ப்பாணத்தில் இன்றும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 யாழ் போதனா வைத்தியசாலை  மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 676 பேருக்கு Covid-19 பரிசோதனை இன்று செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேருக்கும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுவில் - 8 ( ஒருவரை தவிர ஏழு பேரும் தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் )

சண்டிலிப்பாய் - 3  (தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் )

தெல்லிப்பழை  - 1 தொற்றாளருடன் தொடர்பு கொண்டிருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர் )

புதுக்குடியிருப்பு - 1 ( ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்)

தம்பகொலபட்டின  தனிமைப்படுத்தல் நிலையம் -1

பரிசோதனைக்கு உட்பட்ட ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post