மறு அறிவித்தல் வரை பூட்டப்பட்டது உரும்பிராய் சந்தை - தவிசாள ர் நிரோஷ் அறிவிப்பு - Yarl Voice மறு அறிவித்தல் வரை பூட்டப்பட்டது உரும்பிராய் சந்தை - தவிசாள ர் நிரோஷ் அறிவிப்பு - Yarl Voice

மறு அறிவித்தல் வரை பூட்டப்பட்டது உரும்பிராய் சந்தை - தவிசாள ர் நிரோஷ் அறிவிப்பு




உரும்பிராய் பிரதேச சபை முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

ஏற்கனவே கெரோனா நோயில் பீடிக்கப்பட்டவரிடம் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் அவர் உரும்பிராய் பொதுச் சந்தையில் நடமாடியதைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நாட்களில் சுகாதார ஆலோசனை பெறப்பட்டு மீளத் திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தெரிவித்தார். 

இந் நிலையில் சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post