முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கப்படாதிருப்பது குறித்து அதிருப்தி கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும்இ சுற்றாடல் அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை பொகவந்தலாவையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டபோது தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி விவகாரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவற்றுக்கு தீ;ர்வுகாண்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றோம். கடந்த காலங்களாக எழுந்த இந்த சர்ச்சைக்கு விரைவில் தீர்வு முன்வைக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார் அமைச்சர்.
Post a Comment