சுனாமி ஆழிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்டோரின் நினைவேந்தல் யாழ் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.
பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் 1000 கணக்காணோர் காவுகொள்ளப்பட்டனர், குறித்த நினைவாலையத்தில் 1001ன் உடல்கள் புதைக்கப்பட்டு நினைவாலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று 100க் கணக்கான உறவுகள் சுகாதார முறைப்படி கூடி அஞ்சலி செலுத்தினர், இதில் பிரதான நினைவுத்தூபிக்கு மலர்மாலையை அணிவித்து சுடரினை பா.உ சிவஞானம் சிறிதரன் ஏற்றி வைக்க,
பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து உறவினர்கள் தமது உயிர் தீத்த உளவுகளுக்கான சுடரை ஏற்றி கண்ணீர் மல்க கதறி அழுது அஞ்சலித்தனர்.
Post a Comment