அடுத்த மாதம் முதல் வடக்கில் கொரோனா தடுப்பூசி - மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice அடுத்த மாதம் முதல் வடக்கில் கொரோனா தடுப்பூசி - மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

அடுத்த மாதம் முதல் வடக்கில் கொரோனா தடுப்பூசி - மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு



எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

நாளை ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன  முதற் கட்டமாக சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டமாக பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post