தமிழர் வரலாற்றில் பொத்துவில் பொலிகண்டிப் பேரெழிச்சிப் போராட்டம் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியே - பேரவை தெரிவிப்பு - Yarl Voice தமிழர் வரலாற்றில் பொத்துவில் பொலிகண்டிப் பேரெழிச்சிப் போராட்டம் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியே - பேரவை தெரிவிப்பு - Yarl Voice

தமிழர் வரலாற்றில் பொத்துவில் பொலிகண்டிப் பேரெழிச்சிப் போராட்டம் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியே - பேரவை தெரிவிப்பு



தமிழர் தாயகத்தில் கடந்த 3/2/2021 - 7/2/2021 வரை நடந்து முடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளது. 

வடகிழக்கு சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை உள்ள எட்டு மாவட்டங்களிலும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தன்னெழிச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் பங்கெடுத்தார்கள் என்பது ஒரு மாபெரும் வரலாற்று வெற்றியே.

பொத்துவில் தொடக்கம்  பொலிகண்டி வரையிலான  போராட்டத்தில் வடகிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் பூரண ஒத்துழைப்பும் களச்செயற்பாடுகளும் அவர்கள் தமிழ்த் தேசியத்தின் மீது கொண்ட பற்றுறுதியும் பாராட்டத்தக்கதே. இதேபோல் வடக்கு கிழக்கில் உள்ள சமூகமட்ட செயற்பாட்டு அமைப்புக்கள், தமிழ்த் தேசியத்திற்கான சிவில் அமைப்புக்களினதும் ஆதரவும் ஒத்துழைப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததே மேலும் இப் போராட்டத்தில் சிங்கள பேரினவதிகளால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து தடைகளையும் முன்னின்று தகர்த்து வடகிழக்கு சிவில் சமூகத்தின் இப் போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்த பெருமை தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ்த் தேசியத்தின் மீது விசுவாசமாக செயற்படும் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையே சாரும். இதை விட இப் போராட்டத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்களினது செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கதே.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது இன்று தாயகம் தாண்டி சர்வதேசம் வரை சென்றிருக்கின்றது என்றால் வடகிழக்கில் வாழும் எம் அனைத்து இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் பொது மக்களையே சாரும். மேலும் இப் போராட்டத்தை சமூகவலைத்தளங்களின் ஊடாக அனைவரிடமும் கொண்டு சேர்த்த பெருமை சமூக வலைத்தள போராளிகளையே சாரும். இதிலும்  தமிழ்த் தேசியத்தின் பாதையில் தடம் மாறாமல் பயணித்த  ஊடகவியலாளர்களின் பணிகள் மேச்சத்தக்கதே.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேசத்தில் இருந்து எமக்கான ஒத்துழைப்புக்களையும்  புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் வாகன பேரணிகளையும், போராட்டங்களையும் ஏற்பாடு செய்து நடாத்திய புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்கு என்பது மிகவும் பாராட்டத்தக்கதே.

இப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டத்தை முன்நின்று வழிநடாத்தி வெற்றியடைய செய்த வடகிழக்கு சிவில் அமைப்புக்களின் மதகுருமாருக்கும், ஏனைய பிரதிநிதிகளுக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதுடன் இத்தோடு வடகிழக்கு சிவில் அமைப்புக்களின்     தமிழ்த் தேசியத்திற்கான பணி நின்று விடாமல் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டும் என்றும் இப் போராட்டத்தில் தன்னெழுச்சியாக கலந்து கொண்டு ஆதரவளித்து உங்கள் தார்மீக கடமையை நிறைவேற்றிய அனைத்து உறவுகளுக்கும் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் இதேபோல் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை உங்களோடு பயணிக்கும்.

எஸ்.நிஷாந்தன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை

0/Post a Comment/Comments

Previous Post Next Post