இம்ரான் கானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து : கவலையில் ஹக்கீம், ரிஷாட்....!!! - Yarl Voice இம்ரான் கானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து : கவலையில் ஹக்கீம், ரிஷாட்....!!! - Yarl Voice

இம்ரான் கானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து : கவலையில் ஹக்கீம், ரிஷாட்....!!!



இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மாத்திரமே சந்திப்புகளை நடத்தவுள்ளார். ஹக்கீம், ரிஷாட் ஆகியோருடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை அண்மையில் சந்தித்து, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் கலந்துரையாடியிருந்தார். இதன்போது பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கோரியிருந்தனர். இதன்படி குறுகிய நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த சந்திப்பு நடைபெறாது என பாகிஸ்தான் தூதுவரால், மேற்படி இரு தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சந்திப்பு இரத்துக்கான காரணம் வெளியாகாதபோதிலும், அரச உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தத்தால் அவ்வாறு நடந்திருக்ககூடும் என நம்பப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post