ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது – ஜி.எல். பீரிஸ் - Yarl Voice ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது – ஜி.எல். பீரிஸ் - Yarl Voice

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது – ஜி.எல். பீரிஸ்



ஜெனீவா விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்றும் அதற்கான அவசியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரையறைக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்ளக விவாரத்தில் தலையிடவும் இலங்கைக்கு எதிராக செயற்படவும் மனித உரிமை ஆணையாளருக்கு அதிகாரமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post