அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளின் போது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் போது அரசாங்கம் தனது ஆதரவாளர்களிற்கு முன்னுரிமை வழங்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
60 வயதிற்கு மேற்பட்ட அதிகளவு பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களிற்கே தடுப்பூசியை வழங்குமபறு உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டது ஆனால் அரசாங்கத்திடம் அவ்வாறான முன்னுரிமைகள் எவையுமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment