ஜ.நா மனித உரிமை பேரவைக்கு முன்னதாக எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் பேரணியினை நடத்த இருக்கின்றார்கள்.
இதில் பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரண்டு உரிமையினை வெளிப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி சாதாரண பத்து கோரிக்கைகளை அரசாங்கத்திடம் தான் முன்வைத்துள்ளதாகப் பொய்யான தகவலைப் பதிவுசெய்துள்ளார்கள்.
இது சர்வதேச சமூகத்தினை தவறாக வழிநடத்துகின்ற ஒருசெயற்பாடு. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அந்த பேரணியில் தாயகத்தில் இருக்கின்ற மக்களுக்கு வலுசேர்க்கும் முகமாக இங்கு நடந்த இனப் படுகொலைக்காகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையினை வலியுறுத்தியும், தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக வடகிழக்கு தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்படவேண்டும்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டுமென்பதையும் வலியுறுத்திப் புலம்பெயர் தமிழர்கள் ஜ.நா முன்றலில் பல்லாயிரக்கணக்கில் அணிதிரள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment