பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என இலங் கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காகக் கடந்த சில மாதங்களாக நாளாந்தம் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .
ஆனால், தற்போது 5 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண் ணிக்கை குறைய இதுவே காரணம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆபத்தான நிலைமையைச் சரியாக மதிப்பிடுவதற்கு பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment