கஞ்சா விநியோகிக்கும் முச்சக்கரவண்டி சாரதி யாழில் அதிரடியாக கைது - Yarl Voice கஞ்சா விநியோகிக்கும் முச்சக்கரவண்டி சாரதி யாழில் அதிரடியாக கைது - Yarl Voice

கஞ்சா விநியோகிக்கும் முச்சக்கரவண்டி சாரதி யாழில் அதிரடியாக கைது



யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப் பொருளை விநியோகித்து வரும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுழிபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணம் நகரில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பல இடங்களுக்கும் கஞ்சா போதைப்பொருளை விநியோகிப்பதாக விசாரணையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post