கிளி வட்டக்கச்சியில் கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் வீட்டுக்குத் தீ; கொல்லப்பட்டவரின் மனைவி - சகோதரிகள் மீது பொலிஸார் அடாவடி - Yarl Voice கிளி வட்டக்கச்சியில் கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் வீட்டுக்குத் தீ; கொல்லப்பட்டவரின் மனைவி - சகோதரிகள் மீது பொலிஸார் அடாவடி - Yarl Voice

கிளி வட்டக்கச்சியில் கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் வீட்டுக்குத் தீ; கொல்லப்பட்டவரின் மனைவி - சகோதரிகள் மீது பொலிஸார் அடாவடி



கிளிநொச்சி  வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பலியான துஷ்யந்தன் என்பவர் மீது கத்தியால் குத்திய நபரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டுள்ள அதேவேளை இறந்தவரின் மனைவி, சகோதரிகள் மீது பொலிஸார் தாக்குலை நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. 

இன்று காலையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

சந்தேக நபரின் வீட்டிலிருந்து சில பொருட்களை எடுத்துச்செல்ல உறவினர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் சென்ற வேளை இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் உட்பட கிராம மக்கள் சிலர் ஒன்றிணைந்து இறந்தவருக்கு நீதி கோரி பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன்போதே பொலிஸார் அவர்களைத் தாக்கியுள்ளனர்.

இவ்வேளையில் கத்திக்குத்து நடத்தியவரின் வீட்டின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை பொலிஸாரின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post