ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பாத பட்சத்தில் அந்த பதவிக்கு போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் பசில் ராஜபக்சவே என பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சகான் பிரதீப் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லநோக்கி தொலைநோக்கும் புத்திசாலித்தனமும் பசில் ராஜபக்சவிற்N கஉள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜனபெரமுனைவை பொறுத்தவரை நாங்கள் பசில் ராஜபக்சவே மிகப்பொருத்தமானவர் என்பது குறித்து தெளிவாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த எண்ணத்தை ஏற்காத சிலர் சேற்றை வாரியிறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு;ள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு இன்னமும் நான்கு வருடங்கள் உள்ளன அதன் பின்னர் மக்கள் கடந்த முறை போன்று மக்கள் அவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்காக கிளர்ந்தெழக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Post a Comment