யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்து கொண்ட திருமண வைபவம் ஒன்றில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இன்று காலை அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மணிவண்ணன் தெரிவித்துள்ளதாவது..
கொரோனா தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கடந்த 20.03.2021ம் திகதி நெல்லியடியில் கலந்து கொண்டமையால் என்னை உடனடியாக சுய தனிமைபடுத்தி கொள்வதோடு PCR பரிசோதனையும் செய்து கொண்டேன்.
என்னோடு இக்காலப் பகுதியில் தொடர்பு கொண்ட நபர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுகொள்கின்றேன்.
இதனால் இன்றைய தினம் நடைபெறவிருந்த மாநகரசபையின் விசேட கூட்டம் இரத்து செய்யப்படுகின்றது என்பதையும் அறிய தருகின்றேன்.
Post a Comment