மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிலாவரை அகழ்வாராய்ச்சி இடைநிறுத்தம் - Yarl Voice மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிலாவரை அகழ்வாராய்ச்சி இடைநிறுத்தம் - Yarl Voice

மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிலாவரை அகழ்வாராய்ச்சி இடைநிறுத்தம்



வலி கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நிலாவரைப் பகுதியில் தொல்பொருள் திணைக் களத்தினால் அடாத்தாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி பொது மக்களின் கடும் எதிர்ப்பினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நிலாவரை கிணற்றடி பகுதியில் தொல்பொருள் திணைக்களம் அண்மையில் அகழ்வு பணியை மேற்கொண்டிருந்தது.

 எனினும் பொது மக்களினதும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளினதும் கடும் எதிர்ப்பை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.

 இந்த நிலையில் மீண்டும் அடாத்தாக இன்றையதினம் அகழ்ப்பணி முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இவ்வாறு பொது மக்களும் அரசியல் கட்சிகளும் வெளியிட்ட கடும் எதிர்ப்பையடுத்து அடாத்தாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post