யாழில் இனந்தெரியாத கும்பல் தாக்குதல் நடத்திய வீட்டை நேரடியாக சென்று பார்வையிட்ட மணிவண்ணன், சரவணபவன் - Yarl Voice யாழில் இனந்தெரியாத கும்பல் தாக்குதல் நடத்திய வீட்டை நேரடியாக சென்று பார்வையிட்ட மணிவண்ணன், சரவணபவன் - Yarl Voice

யாழில் இனந்தெரியாத கும்பல் தாக்குதல் நடத்திய வீட்டை நேரடியாக சென்று பார்வையிட்ட மணிவண்ணன், சரவணபவன்



யாழ் நகரில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல்  தாக்குதல் நடத்திய வீட்டை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார். 

நகரிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வாள்கள் கத்திகளுடன் வந்த கும்பலொன்று வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த மோட்டார் வாகனம் உட்பட பல பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது.

இதற்கும் மேலாக வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.

இதனால் அச்சமடைந்த வீட்டுக்காரர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே வேளை இனந்தெரியாத கும்பலின் தாக்குதல் நடத்திய வீட்டிற்கு யாழ் மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.







0/Post a Comment/Comments

Previous Post Next Post