கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 91 பேர் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பகுதியினர் தகவல் வெளியிட்டனர்.
சில தினங்களுக்கு முன்னர் கரவெட்டி பிரதேச செயலகத்தில் நிகழ்வொன்று இடம்பெற்றதாகவும் இதில் பிரதேச செயலர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலர் உட்பட 91 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்
சில தினங்களில் இவர்களிற்கு பி.சீ.ஆர்.பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(44
Post a Comment