தென்மராட்சி-கெற்பேலி மத்திப் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கெற்பேலி மத்தி மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 42 வயதான தாய் 16 மற்றும் 23 வயதான அவரது இரண்டு மகன்கள் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அயலவரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment