எதிர்வரும் திங்கட்கிழமை வட கிழக்கில் கறுப்பு கொடிகட்டி மன்னார் ஆயருக்கு அஞ்சலி செலுத்த சிறிதரன் எம்பி அழைப்பு - Yarl Voice எதிர்வரும் திங்கட்கிழமை வட கிழக்கில் கறுப்பு கொடிகட்டி மன்னார் ஆயருக்கு அஞ்சலி செலுத்த சிறிதரன் எம்பி அழைப்பு - Yarl Voice

எதிர்வரும் திங்கட்கிழமை வட கிழக்கில் கறுப்பு கொடிகட்டி மன்னார் ஆயருக்கு அஞ்சலி செலுத்த சிறிதரன் எம்பி அழைப்பு




தமிழ்தேசிய மண்ணிலே தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அவர்களுடைய வாழ்வுக்காகவும் ஒரு நீண்ட பெரும் பாதையிலே தன்னுடைய ஆழமான  பங்கினை  ஆத்மார்த்தமாகவும்  உணர்வாகவும்  வெளிப்படுத்திய ஆன்மா ஒன்று மீளாத்துயரில் உறங்கிக் கொண்டிருக்கின்றது 

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதிகமான பற்று கொண்ட ஒரு மனிதனாக நின்று அவர் தன்னை அர்ப்பணித்துஇன்று   உறக்கம் கொள்கின்ற அவரை நினைக்கும் போது நெஞ்சம் துடிக்கின்றது 

இப்படியான ஒரு ஆயர்  இனி  கிடைப்பாரா என்பது சந்தேகமே தமிழ் மக்களுடைய உரிமைக்காக  வாழ்வுக்காக வாழ்வாதாரத்துக்காக இருப்புக்காக  குரல் கொடுத்த ஒரு மனிதன் 


இலங்கையினுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின்  முன்னால் சென்று மிகத் துணிச்சலோடு ஆதாரத்தோடு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போய் கொல்லப்பட்டார் கள்என்ற செய்தியை வெளிப்படையாக துணிச்சலுடன்  சொன்ன ஒரு மனிதர் 

நெடுந்தீவில் பிறந்திருந்தாலும் வடக்கு-கிழக்கு தாயகம் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழர்கள் மீதும் தமிழ் மண்மீதும் உறுதியான ஒரு பற்றுக்கொண்ட ஒரு மனிதனை தமிழ் மக்கள் இழந்து தவிக்கிறார்கள் 

அவருடைய இறுதி திருப்பலி இடம்பெறும் நாளான எதிர்வரும்திங்கட்கிழமை வடக்கு கிழக்கு எங்கும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கறுப்பு கொடிகளோடு அவருடைய  உருவப்படங்கள் தாங்கிய நிலையில் அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நான் கேட்டுக்கொள்கின்றேன் எனவே ஆயரின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஏற்கமுடியாத ஒன்று எனவும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post