தமிழ்,சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிஷேசம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் சகல மக்களிற்கும் இப் பிலவ புதுவருடம் நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், சௌபாக்கியத்தையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு இன்றைய தினம் (2021.04.16) புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிஷேசத்தினை வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டு அரசாங்க அதிபரின் ஆசியுடன் கைவிஷேசத்தினை பெற்றுகொண்டனர்.
Post a Comment