யாழில் முடக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் நாளை நடைபெறும் PCR பரிசோதனையில் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது.
PCR செய்யாத எவரும் கடைகளைத் திறந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் சுகாதாரப் பகுதியினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாளை நடைபெறும் PCR பரிசோதனையே முடக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இறுதி பரிசோதனை எனவும், சுகாதாரப் பிரிவினர் வர்த்தக நிலையங்களுக்கு கள விஜயம் மேற்கொள்ளும் போது யாராவது PCR செய்யாமல் வர்த்தக நிலையங்களில் பணிபுரிந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்
Post a Comment