கொரோனா வைரசினால் இரு வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் மரணம் - Yarl Voice கொரோனா வைரசினால் இரு வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் மரணம் - Yarl Voice

கொரோனா வைரசினால் இரு வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் மரணம்




கொரோனாவைரஸ் காரணமாக இரு வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனாவைரஸ் காரணமாக நேற்று உயிரிழந்த நால்வரில் இரு வெளிநாட்டவர்களும் உள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு இரண்டில் தங்கியிருந்த 46 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார், தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்தவேளை அவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது என அரசாங்க தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.பம்பலப்பிட்டியில் வசித்துவந்த 63 வயது ஆண் ஒருவர் சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post