அதிகரிக்கும் கொரோனா பரவலாம் நாடுமுழுவதிலும் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் ஆராய்வு - Yarl Voice அதிகரிக்கும் கொரோனா பரவலாம் நாடுமுழுவதிலும் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் ஆராய்வு - Yarl Voice

அதிகரிக்கும் கொரோனா பரவலாம் நாடுமுழுவதிலும் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் ஆராய்வு



நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளை மூடுவது குறித்து ஆலோசனை முன்வைக்கப் பட்டுள்ளது என ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட் -19 நோய் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளை மூன்று வாரங்களுக்கு மூடுவது தொடர்பான யோசனை குறித்து ஆராயப்படுவதாக பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கொரோனா தொற்று அதிகரித்துள்ள மையால் பாடசாலைகளை மூடுமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தயங்குகிறார்கள் என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post