யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை அடுத்து மூடப்பட்ட யாழ். வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் அதிகமான நபர்களிடம் பி.சி.ஆர் மாதிரிகளை எடுத்ததற்குக் காரணம் கொரோனாவின் பரம்பல் தீவிரம் எவ்வாறு இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகவே.
இதன் மூலம் கிடைக்கப்பெற்ற முடிவுகளின் பிரகாரம் இதனைக் கட்டுப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. எனவே மக்கள் தேவையற்ற
அச்சத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றார்.
Post a Comment