டிவில்லியர்ஸ கையோட கூட்டி வாருங்க: தெ.ஆப்பிரிக்க பயிற்சியாளர் - Yarl Voice டிவில்லியர்ஸ கையோட கூட்டி வாருங்க: தெ.ஆப்பிரிக்க பயிற்சியாளர் - Yarl Voice

டிவில்லியர்ஸ கையோட கூட்டி வாருங்க: தெ.ஆப்பிரிக்க பயிற்சியாளர்




எதிர்வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக டிவிலியர்ஸ் பங்கேற்க வேண்டும் என அந்த அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவிலியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.

 இருப்பினும், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 தொடரில் டிவிலியர்ஸ் பங்கேற்பார் என தென்னாப்பிரிக்க அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏபி டிவிலயர்ஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 15 போட்டிகளில் களமிறங்கி 5 அரை சதங்கள் உட்பட 158.74 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 454 ரன்கள் குவித்தார். 

அதே அதிரடியை தற்போது நடைபெற்று வரும் 14ஆவது சீசனிலும் தொடர்ந்து வருகிறார். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்துக் களமிறங்கிய ஆர்சிபி அணியில் டிவிலியர்ஸ் 27 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்கள் குவித்தார்.

 பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவிட்டு, எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டியதை கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி கலந்த திகைப்புடன் பார்த்தது.

தென்னாப்பிரிக்க அணி விருப்பம்:

இவரின் இந்த அதிரடி ஆட்டத்தைப் பார்த்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும், டிவிலியர்ஸ் உடனடியாக ஓய்வு அறிவிப்பை ரத்து செய்துவிட்டு அணியில் இணைய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து அந்த அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த போது சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். 

ஏபி டிவிலயர்ஸுக்கு அழைப்பு விடுத்தீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த பவுச்சர் “ஆம், ஐபிஎல் 14ஆவது சீசன் துவங்குவதற்கு முன்பே டிவிலியர்ஸிடம் இதுகுறித்து பேசிவிட்டேன். 

அவர் இன்றுவரை உலகத்தரம் வாய்ந்த வீரராக திகழ்கிறார். டி20 லீக் போட்டிகளில் மேட்ச் வின்னராக இருக்கிறார். அவர் மீண்டும் அணியில் இணைவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.

அனுபவம் கை கொடுக்கும்:

ஐபிஎல் 14ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அடுத்து, இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பையும் இந்தியாவில்தான் நடக்கவுள்ளது. 

ஒருவேளை டிவிலியர்ஸ் தென்னிப்பரிக்க அணியில் இணைந்து டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றால், ஐபிஎல் அனுபவம் மூலம் சிறப்பாக விளையாடுவார் என்ற நோக்கில்தான் தெ.ஆப்பரிக்க கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் டிவிலியர்ஸை அணுகுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post