வலி தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 52 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வசிக்கும் ஏழாலையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவகாந்தனின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பிலேயே குறித்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இவற்றை வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்ஷன், கிராம சேவகர் அ.அகிலன், வடமாகாண கூட்டுறவு தொழிலாளர் தொழிற்சங்க செயலாளர் வே.செல்வகாந்தன் மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைத்தனர்.
Post a Comment