கிளி. உருத்திரபுரத்தில் வாள்வெட்டு பெண் உட்பட 11 பேர் காயம்! - Yarl Voice கிளி. உருத்திரபுரத்தில் வாள்வெட்டு பெண் உட்பட 11 பேர் காயம்! - Yarl Voice

கிளி. உருத்திரபுரத்தில் வாள்வெட்டு பெண் உட்பட 11 பேர் காயம்!




கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதியால் சென்ற ரக்ரர் மாட்டுடன்  மோதியதில் ஏற்பட்ட முரண்பாடு இவ்வாறு மோசமான நிலையை உருவாக்கியுள்ளது.

இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் 11 பேர் காயங்களுக்கு உள்ளானதுடன்; அவர்களில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்பி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post