போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பதா என்பது குறித்து 28 ம் திகதி முடிவெடுக்கவுள்ளதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்த வாரம் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது இந்த கூட்டத்தில் நிலைமையை மதிப்பீடு செய்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் காலை நான்கு மணிக்கு நீக்கப்பட்டு இரவு 11பதினொரு மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரும் எனவும் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் மக்களை வீடுகளிற்குள்ளேயே இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Post a Comment