வடக்கில் மேலும் 3 கொரோனா நோயாளர்களை அனுமதிக்கும் வைத்திய வசதிகள் நேற்று முதல் ஏற்படுத்தப்படுகின்றது.
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விடுதிகளான இலக்கம் 2 மற்றும் 3ஆம் விடுதிகள் கொரோனா சிகிச்சை விடுதியாக மாற்றப்படுகின்றது.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் பகுதியில் இராணுவத்தினரின் வைத்தியசாலையாக இயங்கிய இடம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் ஓர் விடுதி கொரோனா விடுதியாக நேற்று முதல் மாற்றும் நணவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
Post a Comment