ரூவாண்டாவின் இனப் படுகொலையை தாம் அங்கீகரிப்பதாகவும் அதற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் கிகாலியில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் அதிபர் இம்மானுவேல் மக்றோன் தெரிவித்துள்ள அதேவேளை ரூவாண்டாவுடனான உறவுகளை மேம்படுத்த தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்
ருவாண்டா படுகொலையை பிரான்ஸ் கண்டுகொள்ளவில்லை எனவும் மிகவும் பொறுப்பற்று நடந்து கொண்டது எனவும் கடந்த பங்குனி மாதம் ருவாண்டா இனப்படுகொலை தொடர்பாக வெளியாகிய சுயாதின அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது
சுயாதீன மானதும் குறிப்பிடத்தக்கதுமான அறிக்கை இது என பாராட்டியுள்ள ருவாண்டா அதிபர் பால் ககமே இந்த அறிக்கை சர்வதேச உறவுகளை மேம்படுத்த வழிகோலியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அதிபர் மக்ரோனின் உரையை வரவேற்ற அதிபர் ககமே மன்னிப்பை விட பிரான்ஸ் அதிபரின் வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை என தெரிவித்தார்.
Post a Comment