தெற்காசியாவை உலுக்கும் கொரோனாவுக்கு நிமிடத்திற்கு மூவர் உயிரிழப்பதாகவும் இவற்றிலிருந்து தெற்காசியாவை மீட்டெடுக்க 164 மில்லியன் அமரிக்க டொலர்தேவை எனவும் யு.என்.எச்.சி.ஆர். அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
கொவிட்-19 புதிய பரவலின் வேகமும் அளவும் உயிர் காக்கும் சிகிச்சையை வழங்கும் நாடுகளின் இயலுமையில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என தெற்காசியாவுக்கான் யு.என்.எச்.சி.ஆர். பிராந்தியப் பணிப்பாளர் ஜோர்ஜ் லார்யா-அட்ஜே தெரிவித்தார்.
´வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன. ஒட்சிசனுக்கான மற்றும் ஏனைய மருத்துவ சாதனங்களுக்கான பற்றாக்குறை உள்ளது. சுகாதார முறைமை உடைந்து நொறுங்கக் கூடிய ஆபத்து உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment