யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்ப்பு - கொரோனா காரணமா? - Yarl Voice யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்ப்பு - கொரோனா காரணமா? - Yarl Voice

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்ப்பு - கொரோனா காரணமா?




யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். யாழ். நாவந்துறை பகுதியியை சேர்ந்தவரே மரணமடைந்துள்ளார். 

குறித்த பெண் உறவினர் ஒருவர்  கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் குறித்த பெண்ணும் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு உடல்நிலைப் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  உயிரிழந்திருக்கின்றார்.

மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில்  கொரோனாவால் மரணம் நிகழ்ந்ததா? என்ற அச்சம் நிலவுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post