முதற்கட்ட தடுப்பூசிகளை விரைவாக போட்டால் அடுத்த கட்டத்தை விரைவாக பெறலாம் - அங்கஜன் எம்பி - Yarl Voice முதற்கட்ட தடுப்பூசிகளை விரைவாக போட்டால் அடுத்த கட்டத்தை விரைவாக பெறலாம் - அங்கஜன் எம்பி - Yarl Voice

முதற்கட்ட தடுப்பூசிகளை விரைவாக போட்டால் அடுத்த கட்டத்தை விரைவாக பெறலாம் - அங்கஜன் எம்பி


யாழ் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ள தடுப்பூசியை விரைவாக மக்களுக்கு செலுத்தும் பட்சத்தில் விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசி கிடைக்கப்பெறும் என நாடாளுமன்ற உறுப்பிர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் கண்காணிப்பு விஜயமொன்றை  மேற்கொண்டிருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கினைப்பு குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் விடுதியை பார்வையிட்டதுடன் வைத்தியசாலை பதில் பணிப்பாளருடனும் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கோள்விக்கு பதில் வழங்கும் போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கைகயில்...

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகமாக இருந்தபோதும் இப்போது பயணத்தடை காரணமாக குறைந்து வருகிறது. தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர்கள் தேவையாக உள்ளது .

அவற்றை சுகாதார அமைச்சுடன் பேசி பெற்றுக் கொடுக்க நாம் முயற்சிகளை எடுப்போம் .ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் கொரோனா  சிகிசைக்கான பணியாளர்களை உள்ளெடுக்க ஆலோசித்துள்ளோம்.

நேற்றைய தினம் வருகைதந்த நாமல் ராஜபக்ஷ தடுப்பூசி போடும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு தெரிவித்ததுடன் முதல் கட்ட 50,000 தடுப்பூசி போடப்பட்டு முடிவடைந்தால்  அடுத்த கட்டமாக மேலும் 50,000 தடுப்பூசி அனுப்ப முடியும் என  தெரிவித்திருந்தார். 

ஆகவே எவ்வளவு வேகமாக இந்த முதல்கட்ட தடுப்பூசியை நாம் போட்டு முடிக்கிறோமோ அந்தளவு விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கும். 

52 வீதமான மக்கள் நேற்று யாழில் கொரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். மக்களுக்கான தேவையற்ற பயத்தைப் போக்க தெளிவூட்டல்களை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளாக நாங்கள் தெளிவூட்டல்களை செய்வதோடு அரச உத்தியோகத்தர்களும் அதனை செய்ய வேண்டும். 

முதல்கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு  அடுத்த கட்ட தடுப்பூசி போடுவதற்கு 12 வார கால இடைவெளி உள்ளது. அந்த சீரான இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போடப்படும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post