கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று ஐ.பி.எல். ஆட்டம் ஒத்திவைக்கப்படும் நிலையேற்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதவுள்ளன.
இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோரு
க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்றைய ஐ.பி.எல். ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் குறித்த செய்தியை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்றைய ஐ.பி.எல். ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் குறித்த செய்தியை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Post a Comment