நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள முழுநேர பயணக் கட்டுப்பாடு நாளை மறுதினம் செவ்வாய்கிழமை அதிகாலை முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டதும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே வெளியே வர முடியுமென்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ளது.
இந்தப் பயணக் கட்டுபாபட்டை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் இரண்டு கட்டங்களாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் மறுதினம் நாளை மறுஞதினம் அதிகாலை 4 மணி வரையில் முதலாவது கட்ட பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளை மறுதினம் காலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை இரவு 11 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
Post a Comment