இலங்கையில் இந்த மாதம் நேற்று சனிக்கிழமை வரையான 22 நாட்களில் மட்டும் 500 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளது.
இவ்வாண்டு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் 30 வரையான நான்கு மாதங்களில் 474 மரணங்களே பதிவான நிலையில் இந்த மாதம் 22 நாட்களில் 500 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் புத்தாண்டுக் கொத்தணியுடன் தொற்று நோயின் மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ளது.
அண்மைய நாட்களில் தினசரி 3500 வரையான தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Post a Comment