அச்சுவேலி பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இளைஞனை இராணுவத்தினர் கைது செய்தனர்.
அச்சுவேலிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப் பொருளை நுட்பமான முறையில் சிறு சிறு துண்டுகளாக பொதி செய்து விற்பனையில் ஈடுபட்டுவரும் இளைஞன் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
குறித்த தகவலின் அடிப்படையில் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞனை இராணுவத்தினர் கைது செய்து அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment