யாழ். கோப்பாய் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம் - Yarl Voice யாழ். கோப்பாய் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம் - Yarl Voice

யாழ். கோப்பாய் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்



யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் பணி இடமாற்றம் வழங்கப்பட்ட கோப்பாய் பிரதேச செயலக உதவி திட்டமிடல் அதிகாரியான ராஜதுரை திலீபனின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதிக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது  இராஜதுரை திலீபன் தற்காலிகமாக வலிகாமம் கிழக்கின் பிரதேச செயலகத்திற்கு உதவி உதவி திட்டமிடல் அதிகாரியாக இணைக்கப்பட்ட திலீபன்  முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் திட்டமிடல் சேவையில் ஏழரை ஆண்டு சேவையை நிறைவு செய்தார்.

 2020 ஆம் ஆண்டு  வலிகாமம் கிழக்கு, கோப்பாய் பிரதேச செயலகத்தில் நிரந்தரமாக இணைக்கப்பட்டார். 

இன் நிலையில் வடக்கு மாகாணம் மற்றும் வருடாந்திர இடமாற்றத்திற்கான அவரது வேண்டுகோளை யாழ் மாவட்டச் செயலகம் ஏற்கனவே நிராகரித்தது.

நிராகரிப்புக்கான காரணமாக அவர் ஒரு குறிப்பிட்ட சேவை நிலையத்தில் 6 ஆண்டுகள் சேவையை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி அவருக்கு ஒரு கடிதம் கிடைத்ததுகாரைநகர் பிரதேச செயலகத்திற்கு இட மாற்றம் செய்யப்படுவதாக  நாங்கள் அறிந்தோம்.

ஆகவே அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்மையான கோரிக்கையை கருத்தில் கொண்டு அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post