குறிகாட்டுவான் இறங்கு துறையில் கடலில் முழ்கிக்கிடக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பாதைப்படகினை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடற்படை வீரர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பாதைப் படகு மீட்புபணியில் ஈடுபட்ட கடற்படை வீரர் மின் தாக்கிய நிலையில் சுயநினைவை இழந்துள்ளார்.
அவரை மீட்டு வேலணை வைத்தியசாலைக்கு கொண்டுவந்த நிலையில் அங்கிருந்து ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ஆயினும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
Post a Comment