நாளை குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்லலாம்! வாகனங்களுக்கு அனுமதி கிடையாது: பொலிஸ் பேச்சாளர் - Yarl Voice நாளை குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்லலாம்! வாகனங்களுக்கு அனுமதி கிடையாது: பொலிஸ் பேச்சாளர் - Yarl Voice

நாளை குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்லலாம்! வாகனங்களுக்கு அனுமதி கிடையாது: பொலிஸ் பேச்சாளர்




பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகையில் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே நடை தூரத்திலுள்ள கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கவென வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

ஜூன் 7 வரை பயணக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று அவர் கூறினார். இதற்கிடையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க நாளை, மே 31 மற்றும் ஜூன் 4 ஆகிய திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது.

வீதிகளில் அல்லது பொருட் கொள்வனவுக்காக வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார். 

கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கண்காணிக்க பொலிஸார் நிறுத்தப்படவுள்ளதாகவும் எனினும் மருத்துவமனைகளுக்கு செல்வோருக்கு இக்கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 

இதனிடையே பயணத் தடைகளை தளர்த்தும்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post