ஏழு பேரை விடுதலை செய்ய உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் - குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம் - Yarl Voice ஏழு பேரை விடுதலை செய்ய உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் - குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம் - Yarl Voice

ஏழு பேரை விடுதலை செய்ய உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் - குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்



பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர்  இந்திய  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழகம் முழுவதும் கோரிக்கை இருந்துவருகிறது. 

ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 அந்த கடிதத்தில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள்.

உச்ச நீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து ஏழு பேரையும் விடுதலை செய்ய 9-9-2018-ம் ஆண்டு தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மு.க.ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வழங்கினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post